
இலங்கைக்கு மேலதிக தொழில்வாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இலங்கைக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்பு ஒதுக்கத்தை அதிகரிப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகளுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை தொழிலாளர்களின் நலனை அதிகரிப்பது தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல நாடுகளின் தூதரகங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த வருட இறுதியில் இலங்கைக்கு மேலதிக தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்