
இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்
-யாழ் நிருபர்-
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு, விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீன அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு சுமார் ஆயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா பெறுமதியான வலைகள் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலையில், அதனை மீனவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக வடக்கு, கிழக்கு சார்ந்து வடக்கில் நான்கு மாவட்டங்களும், கிழக்கில் மூன்றுமாக ஏழு கடற்தொழில் மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சீன தூதுவரின் விஜயத்திற்காக ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்