இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிருடன் எழுந்த பெண்!

 

இறந்து விட்டதாக வைத்தியர்களால் அறிவிக்கப்பட்ட பெண் 8 நிமிடங்களின் பின் உயிருடன் எழுந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

கொலராடோவைச் சேர்ந்த பிரியானா லாஃபர்டி (வயது 33) என்பவர் , மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர்,

மயோக்ளோனஸ் டிஸ்டோனியா, கழுத்து, உடல், மற்றும் கைகளை பாதிக்கும் அரிய நரம்பியல் கோளாறாகும், இது திடீர் தசை இழுப்புகளையும் சுருக்கங்களையும் ஏற்படுத்துகிறது. இதற்கு முழுமையான சிகிச்சை இல்லை என்றாலும், அறிகுறிகளை நிர்வகிக்க மருந்துகள் உதவலாம்.

பிரியானா லாஃபர்டியின் உடலில் சோடியம் அளவு ஆபத்தான அளவிற்கு (115 மில்லி ஒவ்வொரு லீற்றர்) குறைந்து, இதயம் 8 நிமிடங்களுக்கு நின்றது.

அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட சுமார் 8 நிமிடங்கள் தனது நினைவு மறுபக்கத்தில் இருந்த அனுபவத்தை குறித்த பெண் பகிர்ந்துள்ளார்.

பிரியானா லாஃபர்டியின் உடல் “கைவிட்ட” நிலையில், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அப்போது, “தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்கும் ஒரு குரலை கேட்டதாகவும், பின்னர் முழு இருளில் மூழ்கியதாகவும் கூறினார். அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து, காலமற்ற ஒரு பரிமாணத்தில் மிதந்ததாக உணர்ந்தார். “நான் திடீரென உடலில் இருந்து பிரிக்கப்பட்டேன். என் மனித உருவை நினைவில் கொள்ளவில்லை. முற்றிலும் அசையாமல் இருந்தேன், ஆனால் முழுமையாக உயிருடன், விழிப்புடன், முன்பை விட அதிகமாக உணர்ந்தேன். வலி இல்லை, ஆழமான அமைதியும் தெளிவும் மட்டுமே இருந்தது,” என அவர் விவரித்தார்.

“மரணம் ஒரு மாயை, ஏனெனில் நமது ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. நமது நினைவு உயிருடன் இருக்கிறது. அந்த நிலையில், நமது எண்ணங்கள் யதார்த்தத்தை வடிவமைக்கின்றன,” என்று கூறினார்.

இந்த அனுபவம், மனித வாழ்க்கையின் தற்காலிக மற்றும் புனிதமற்ற தன்மையை உணர வைத்ததாகவும், ஒரு உயர்ந்த புலனறிவு அல்லது இருப்பு நம்மை வழிநடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.