இறந்து கரையொதுங்கும் ஆமைகள்

யாழ். கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் கரையொதுங்கிவருகின்றமை குறிப்பிட தக்கது.