இரத்தினபுரி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம்

இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.

மருத்துவமனை இயக்குநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சகம் முன்னர் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் GMOA தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தம் இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கி நாளை காலை 8:00 மணி வரை தொடரும் என தெரிவித்தள்ளனர்.

வேலைநிறுத்தத்தின் போது அவசர மற்றும் உயிர்காக்கும் சேவைகள் இன்னும் வழங்கப்படும் என்று GMOA தெரிவித்துள்ளது.

இருப்பினும், மருத்துவமனையில் வழக்கமான சிகிச்சை சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படும் என தெரிவித்தள்ளனர்.