இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டது!

-யாழ் நிருபர்-

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.

எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின் வாயில்கள் இன்றையதினம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

நான்கு வான் கதவுகள் 6 இஞ்ச் அளவுக்கு திறக்கப்பட்டது.

இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.