
இயேசு சிலை மீது தாக்கிய மின்னல்
தென்அமெரிக்க நாடான பிரேசிலில் உலகின் மிக உயரமான இயேசு சிலை உள்ளது. அந்நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மலை பகுதியில் உள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது 125 அடி உயரம் கொண்டது.
இந்த பிரம்மாண்ட சிலை மீது மின்னல் தாக்கிய நிகழ்வு தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டு அந்த புகைப்படம் மற்றும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இந்த இயேசு சிலை மீது மின்னல் தாக்கிய நிலையில், இந்த இயற்கை நிகழ்வு தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில் இந்த சிலை மீது மின்னல் தாக்கியது. இதன் காரணமாக சிலையின் விரல் சேதமடைந்தது. இம் முறை மின்னல் தாக்கியதில் ஏதேனும் சேதமடைந்ததா என்பதை ஆய்வு செய்யவுள்ளனர்.
