இன்ஸ்டகிராமில் ‘ஐ லவ் யூ’ சொல்லி பணத்தை பறிகொடுத்த சிறுவன்!
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் அறிமுகமானார்.
அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக்கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் ‘ஐ லவ் யூ’ என்று ஒரு செய்தியை அனுப்பினாள் அதற்கு அந்த சிறுவன் ‘ஐ லவ் யூ டூ’ என்று பதிலளித்தான்.
மறுநாள் அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் தொலைபேசியின் எண்ணுக்கு அழைத்தார். இன்ஸ்டாகிராமில் சந்தித்த பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்வீர்களா? இதை அறிந்து அந்த பெண்ணின் கணவர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார் அவர்கள் அனைவரும் மைலாவரம் பொலிஸ் நிலையத்தில் இருக்கிறார்கள் உடனே அங்கு வர வேண்டும் என மிரட்டினார்.
இந்த வார்த்தைகளால் பயந்துபோன சிறுவன் அழுது நீங்கள் என்ன சொன்னாலும் செய்வேன் நான் பொலிஸ் நிலையத்துக்கு வரவில்லை என்று கூறினான்.
இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திய குறித்த அந்த நபர் ஒன்லைன் மூலம் 11 000 ரூபாவை சிறுவனிடமிருந்து பறித்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.