
இன்றைய வானிலை அறிவித்தல்
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் முன்னறிவிப்புகளைப் பொதுமக்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.
பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும்.