
இன்றைய நாளில் பதிவான மரக்கறிகளின் விலை
கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்துள்ளன.இதன் காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,350 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய மிளகாய் மொத்த விற்பனை விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ ப்ரோக்கோலியின் மொத்த விலை 4100 ரூபாவாகும். வயல்களில் பயிர்கள் அழிந்து வருவதால் பசுமைக்குடில்களில் விளையும் காய்கறிகளின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
