
இன்று முதல் விசேட ரயில் சேவை
பொசன் பூரணையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு 20 ரயில் சேவைகளும் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.