
இன்று முதல் மாணவர் கணக்குகளுக்கு டிட்வா சூறாவளி நிவாரணம்!
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
இக்கொடுப்பனவிற்கான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் ஏற்கனவே 15,000 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களும் இந்த புதிய கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்களாவர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மைய பாதீட்டுத் திட்ட உரையின் போது அறிவித்ததற்கிணங்க, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் இதன் மூலம் மொத்தம் 25,000 ரூபா நிதியுதவி கிடைக்கப்பெறவுள்ளது.
