
இந்த மாதம் எரிபொருள் விலை திருத்தம் இல்லை!
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இந்தத் தகவலை வெளியிட்டார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு, விலை திருத்தம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் எதிர்காலத்தில் எடுக்கும் எனத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், எரிபொருள் ஒதுக்கீடு முறைமை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
