
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று புதன் கிழமை அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி காலை 6.55 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
கொல்கத்தாவிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகின. வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.1 ஆக பதிவானது.