இந்திய மீனவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்-

முல்லைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் குறித்த மீனவர்கள் 10 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆஜர் படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று 22 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் கடற்படையினரின் சுற்றிவளைப்பில் பத்து மீனவர்களும் படகுடன் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்படும் போது மீனவர்களுடைய மீன்களை மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற் படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை மீன்பிடி திணைக்களத்தினர் இன்று ஆஜர்படுத்தியதுடன் எதிர்வரும் ஆறாம் தேதி வரை விளக்கமறையில் வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.

எவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியா நாகப்பட்டினம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகின்றது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க