
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்று உத்தரவிட்டது.
கைதுசெய்யப்பட்ட 10 மீனவர்களது வழக்கு இன்று வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் மீனவர்கள் நீதிமன்றிற்கு அழைத்துவரப்படு நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டடனர்.
இதன்போது நீதவான் நளினி சுபாஸ்கரன் இவர்களது விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
இவர்களிடமிருந்து 1 படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
