இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அறையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

 

குறித்த போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதுகின்றன.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

இந்தநிலையில் இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.