இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு

ஏப்ரல் மாதத்தில் 30,000 இந்தியர்கள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

வெளியான தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் மொத்தம் 144,320 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில், 29,763 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இது 20.6 சதவீதம் ஆகும்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 866,596 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 148,078 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 105,472 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 85,206 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க