
இந்திய – அவுஸ்திரேலிய முதலாவது டி20 போட்டி இன்று
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் ஆரம்பிப்பதற்கு 6 மாத காலம் உள்ள நிலையில், அதனை இலக்கு வைத்து இந்த தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமைத் தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.