இந்திய அணிக்கு கிடைக்காத ஆசிய கிண்ணம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று செம்பியன் பட்டம் வென்றது.

இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவரிடம் இருந்து ஆசிய கிண்ணத்தை வாங்குவதில்லை என இந்திய அணி தெரிவித்திருந்தது.

இதனால் கிண்ணம் மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆசிய கிண்ணம் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையிடவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்துள்ளார்.