இந்தியா செல்ல முயன்ற 12 பேர் கைது : இரு படகோட்டிகளும் கைது

-மன்னார் நிருபர்-

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக, இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக, 14 நபர்களை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலையை 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளடங்களாக சேர்ந்த 3 குடும்பம் 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று புதன்கிழமை காலை 5.00 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின் இரண்டு படகோட்டிகள் உள்ளடங்களாக 14 பேரூம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.