
இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு 5 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு
இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு 5 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ளது இன்று வியாழக்கிழமை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,302 லிருந்து 4,866 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 7 இறப்புகள் பதிவாகியுள்ளன.
டெல்லியில், ஒரே நாளில் 105 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, இதனால் மொத்த தொற்று எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக, தலைநகரில் 5 மாத குழந்தை உட்பட 87 வயது முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.