இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் : கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
இந்தியாவில் இருந்து எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டுவரப்படும் புனித தாதுக்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் காலை 6 மணி முதல் 11 ஆம் திகதி காலை 7 மணிவரை ஹூணுபிட்டி கங்காராமை விகாரையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த காலப்பகுதியில் குறித்த விகாரையை சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
