இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் கடந்த 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் இருந்து 12,144 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். அத்துடன் பிரித்தானியாவில் இருந்து 3,475பேரும், சீனாவில் இருந்து 3,095 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 2,272 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்