
இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மருந்து உற்பத்தி
2025ஆம் ஆண்டில் மாநில மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த மருந்து உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது.
அமைச்சின் கூற்றுப்படி, இந்த ஆண்டில் SPMC மொத்தம் 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல்களை உற்பத்தி செய்தது.
மார்ச் 2025 இல் 385 மில்லியன் மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல்களை உற்பத்தி செய்து, கூட்டுத்தாபனம் அதன் அதிகபட்ச மாதாந்திர உற்பத்தியையும் அடைந்தது.
நிறுவப்பட்டதிலிருந்து முதல் முறையாக, ளுPஆஊ மருத்துவ விநியோகப் பிரிவால் வழங்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் எந்த பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்ய முடிந்தது.
கூடுதலாக, 2025 ஆம் ஆண்டில் கூட்டுத்தாபனத்தால் ஐந்து புதிய மருந்து தயாரிப்புகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
இதற்கிடையில், இந்த ஆண்டில் SPMC மொத்தமாக 27.06 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
