இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 15 சீனப் பிரஜைகள் கைது!

இராஜகிரிய – வெலிகட பகுதியில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களிடம், இருந்து 15 தொலைபேசிகளும் 15 கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாகப் பல தகவல்கள் பதிவாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்