
இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவு
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவின் அடிப்படையில், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
