ஆளுநர் செந்தில் தொண்டமானின் நடவடிக்கை நியாயமற்றது – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

 

திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரையின் மகாநாயக்கர் அம்பிட்டிய சுகித வன்சதிஸ்ஸ தேரரை விகாரைக்குள் பிரவேசிக்க விடாமல் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் நடவடிக்கை நியாயமற்றது என புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துரலியே இரத்தின தேரர் சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  தேரரை ஆலயத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது, என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அது தொடர்பான விவரங்களை வெளியிடும் நிலையில் தாம் இல்லை என்று அமைச்சர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் விவரங்களைக் கூறுவதைத் தவிர்க்கிறேன்,  என்றார்.

மேலும், அண்மைக் காலத்தில் பெருமளவிலான தொல்பொருள் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

சில தளங்கள் புதையல் வேட்டைக்காரர்களால் அழிக்கப்பட்டுள்ளன, மற்றவை ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் அழிக்கப்பட்டுள்ளன,’ என்று அவர் கூறினார்.

நாகச்சோலை காப்புக்காடு உட்பட வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில விகாரைகள் தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும்,  அங்கு ஆராம வளாகம் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும்,  குருதி விகாரை தொடர்பாகவும் தேரர் தெரிவித்தார்.

போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு காணி பகிர்ந்தளிப்பதை எவரும் எதிர்க்கவில்லை, ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரையின் மகாநாயக்கர் அம்பிட்டிய சுகித வன்சதிஸ்ஸ தேரரை விகாரைக்குள் பிரவேசிக்க விடாமல் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் நடவடிக்கை நியாயமற்றது என புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துரலியே இரத்தின தேரர் சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேரரை ஆலயத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அது தொடர்பான விவரங்களை வெளியிடும் நிலையில் தாம் இல்லை என்று அமைச்சர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் விவரங்களைக் கூறுவதைத் தவிர்க்கிறேன்இ’ என்றார்.

மேலும், அண்மைக் காலத்தில் பெருமளவிலான தொல்பொருள் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

‘சில தளங்கள் புதையல் வேட்டைக்காரர்களால் அழிக்கப்பட்டுள்ளன, மற்றவை ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் அழிக்கப்பட்டுள்ளன,’ என்று அவர் கூறினார்.

நாகச்சோலை காப்புக்காடு உட்பட வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில விகாரைகள் தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், அங்கு ஆராம வளாகம் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், குருதி விகாரை தொடர்பாகவும் தேரர் தெரிவித்தார்.

போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு காணி பகிர்ந்தளிப்பதை எவரும் எதிர்க்கவில்லை, ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும்,  பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்