
ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் 3 நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது!
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியாக இயங்கி வந்ததாக கூறப்படும் ஒரு இடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்களை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலஸிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டி காலி வீதியில் உள்ள குறித்த இடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளையும் அதிகாரிகள் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
