ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கல்விக் கண்காட்சி
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் செ.பகீதரன் தலைமையில் கல்விக் கண்காட்சி ஒன்று சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.
இக் கண்காட்சியினை அயலில் உள்ள பாடசாலை மாணவர்களும், பாடசாலைச் சமூகத்தினரும் பார்வையிட்டுப் பயன்பெற்றனர்.
இக் கண்காட்சியில் விருந்தினராக வலிகாமம் கல்வி வலய தொழில்நுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் விருந்தினராகவும் கலந்து சிறப்பித்திருந்தார்