ஆண் ஒருவரை கொலை செய்த தம்பதி

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் ஃபதான்பூர் என்ற பகுதியில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிவநாத் ( வயது 45 ) என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வினோத் புஷ்பா தம்பதி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அதே கம்பெனியில், சிவநாத் என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போதுதான் அவருக்கும், புஷ்பாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி தகாத உறவில் கொண்டு போய் விட்டுவிட்டது.

ஒருகட்டத்தில், சிவநாத்துடனான உறவை மெல்ல.மெல்ல கைவிட முயன்றார் புஷ்பா. இதற்காக அவரை விட்டு விலகி செல்லவும் தொடங்கினார். ஆனால், புஷ்பா உடனான உறவை சிவநாத்முறிக்க தயாராக இல்லை. மாறாக, ஏன் முன்பு போல என்னிடம் நெருங்கி பழகுவதில்லை? என்று கேட்டு, புஷ்பாவிடம் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனால் எரிச்சல் அடைந்த குறித்த பெண், தனது கணவருடன் சேர்ந்து குறித்த நபரை கொலை செய்ய முடிவு செய்தார். இந்த கொலையை செய்வதற்காகவே, தன்னுடைய கம்பெனியில் ஒரு மாதத்துக்கு முன்பே லீவு எடுத்துக்கொண்டு, கணவரையும் அழைத்துகொண்டு சொந்த ஊரான பிரதாப்கருக்கு சென்றுள்ளார்.

புஷ்பா கம்பெனிக்கு லீவு போட்டுவிட்டு சொந்த ஊர் சென்று விட்டதாக தகவல் கிடைத்ததுமேஇ சிவநாத்தும் கிளம்பி புஷ்பா ஊருக்கு சென்றுவிட்டார். இதைக் கேள்விப்பட்ட புஷ்பா, தன்னுடைய தோழி பூனத்தை அவரது வீட்டில் சந்திக்க வேண்டும் என்று சொல்லி, சிவநாத்தை அழைத்தார்.

தம்பதி சேர்ந்து சிவநாத்தின் கழுத்தை நெரித்துக்கொலை செய்தனர். இதில் மூச்சடைத்து சிவநாத் கீழே விழுந்துவிட்டார். ஆனால், அப்போதும் ஆத்திரம் தீராத குறித்த பெண்  பிறகு கூரிய ஆயுதங்களால் சிவநாத் உடலை மூன்று துண்டுகளாக வெட்டி,  மண்ணை தோண்டி புதைத்து விட்டனர்.

இந்த நிலையில் தங்களது மகனை காணோம்என்று சிவநாத்தின் பெற்றோர் பீகார் போலீஸில் புகார் செய்தனர். இதனால் பீகார் போலிசாரும், சிவநாத் வேலை செய்யும் இடத்தில் அவரை விசாரிக்க வந்தனர்.. அப்போதுதான் அவர் புஷ்பாவுடன் தொடர்பில் இருந்ததாக ஊழியர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, சிவநாத் யாருடன் செல்போனில் கடைசியாக பேசினார் என்றும் ஆய்வு செய்யப்பட்டது . கடைசி போன் புஷ்பாவிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதையும் பொலிஸார் உறுதி செய்தனர்.

இதையடுத்து குறித்த பெண்ணிடம் விசாரணை நடந்தது. கணவருடன் சேர்ந்து கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தோழி வீட்டில் புதைத்ததை ஒன்றுவிடாமல்  குறித்த பெண் வாக்குமூலமாக சொன்னார்.

இந்த நிலையில் பிரதாப்கரில் உள்ள பூனம் வீட்டில் இருந்து, மண்ணை தோண்டி சிவநாத் உடலை பொலிஸார் மீட்டு, போஸ்ட் மாட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் புஷ்பாவும், தோழி பூனம் இருவருமே கைது செய்யப்பட்டனர். கணவரை பொலிஸார் தேடி வருகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்