ஆகஸ்ட் மாதம் முதல் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படவுள்ளது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, எரிபொருள் இறக்குமதி திட்டங்கள், சுத்திகரிப்பு செயற்பாடுகள், சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள், எரிபொருள் ஒதுக்கீடு மற்றும் களஞ்சியத்திறன் ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுடனான ஒப்பந்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்