அஸ்வெசும கொடுப்பனவு இன்று வழங்கப்படுகிறது
செப்டெம்பர் மாதத்துக்கான நலத்திட்ட உதவிகள் இன்று (12) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
11,201,647,000.00 ரூபாய் தொகை 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கு மூலம் இன்று முதல் உதவித் தொகையைப் பெறமுடியும்.
