அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

எந்தவொரு அவசரநிலைக்கும் பதிலளிக்க அனைத்து திணைக்களமும் தயாராக இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் எந்தவொரு பகுதியிலும் மின் தடை ஏற்பட்டால், 1987 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தலாம் என மின்சாரசபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.