அல் ஜலால் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு சுகாதார மருத்துவ பரிசோதனை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸதீன் வழிகாட்டுதலில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் முன்னோடித் திட்டமிடல் மற்றும் ஆலோசனைக்கமைய, சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் வியாழக்கிழமை பாடசாலை சுகாதார மருத்துவ பரிசோதனை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் குழுவினரும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களும் கலந்து கொண்டு, மாணவர்களின் சுகாதார நிலைகளை விரிவாக மதிப்பீடு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் உடல்நலத்தை மேம்படுத்த தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

மேலும், பாடசாலை சுற்றுச்சூழல் பரிசோதனை மற்றும் சிற்றுண்டி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இப்பரிசோதனையின் போது, மாணவர்கள் உட்கொள்ள தகாத உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனுடன், மாணவர்களின் உடல் நலன் மற்றும் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கை, மாணவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.