அரைகுறை ஆடையுடன் போராடிய தபால் ஊழியர்
அதிகாரிகள் அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் இன்று ஈடுப்பட்டமை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
எங்களுக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அதிகாரிகள் தவறிவிட்டதாலேயே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஊழியர் கருத்து தெரிவித்தார்.
எங்களது சீருடைக்கான கொடுப்பனவை அதிகரிக்க கோரியுள்ளோம்.
சைக்கிள்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரியுள்ளோம்.
அத்துடன் ஊழியர்களின் ஒப்பந்தங்களை நிரந்தரமாக்குமாறு கோரியுள்ளோம்.
ஆனால் அதிகாரிகளும் அமைச்சரும் கைரேகை மற்றும் மேலதிக நேரம் பற்றி பேசுகிறார்கள்.
சீருடைகளைத் தைப்பதற்காக 600 ரூபாவும் சைக்கிள்களுக்கான கொடுப்பனவாக 250 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
அஞ்சல் தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பித்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை 19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னரும் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.