
அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைத் தணிக்கும் நடவடிக்கையாக, பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு இறக்குமதியாளர் 1,040 மெட்ரிக் தொன் வரை அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்
