அரிசிக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை – கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகள் உள்ளிட்ட சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், இறக்காமம், நாவிதன்வெளி, உகண, மகாஓயா, பதியத்தலாவ, தெகியத்தகண்டிய, தமண நாமல்ஓயா, ஆலையடிவேம்பு, லகுகல பகுதிகளில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசியை நுகர்வோர் வியாழக்கிழமை பெற்றுக்கொள்ள முயற்சி செய்த போதிலும் வர்த்தர்கள் சிலர் அதிக விலைக்கு அரிசியை தாங்கள் கொள்வனவு செய்ததாக கூறி கூடிய விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

மேலும் சில வர்த்தகர்கள் அரிசியை பதுக்கல் செய்வதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

மேலும் சில அரிசி ஆலைகள் வர்த்தக நிலையங்கள் அரிசி விடயத்தில் மாபியா இரகசியங்கள் பேணி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் இவ்வாறான அரிசி தட்டுப்பாடுகள் இடம்பெற்ற போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள நெல் களஞ்சியசாலை வர்த்தக நிலையங்கள் மற்றும் அரிசி களஞ்சியசாலைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தினுடாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க