
அரசாங்கத்திற்கு சொந்தமான கைவிடப்பட்ட வாகனங்கள் மீட்பு!
அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கைவிடப்பட்ட வாகனங்கள் சில கொழும்பு 7 சாவஸ்தி மாளிகைக்குச் சொந்தமான காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் அதிகாரிகள் சிலர் அந்த கட்டடத் தொகுதியைப் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே இந்த வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த கட்டடத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் நோக்கிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அங்கிருந்த சில வாகனங்கள் சேதமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்