அம்பிட்டிய தேரர் மீது ஏன் நடிவடிக்கை எடுக்கவில்லை? : பொலிஸ் மா அதிபரிடம் சுமந்திரன் கேள்வி

மங்களராமய அம்பிட்டிய சுமன தேரர் தமிழ் சமூகத்திற்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு (IGP) அனுப்பியுள்ள கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சானக்கியனை அம்பிட்டிய சுமன தேரர் தொடர்ச்சியாக தாக்கி பேசிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழர்களையும் துண்டு துண்டாக வெட்டுவேன் என்று வெளிப்படையாக அவர் மிரட்டியிருக்கிறார்.

இச்சயெற்பாடானது நாட்டில் வன்முறை மற்றும் இன, மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்