அமைதிப் போராட்டத்தில் வைத்தியர்கள்

நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியர்கள் அமைதி வழி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

போராட்டமானது இன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெறவே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலைகளின் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்