
அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம்
அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு 300 பேருடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்துள்ளது.
விமானம் ஓடுபாதையில் செல்லும்போது திடீரென இயந்திரத்தில் தீப்பிடித்துள்ளது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியதோடு, விமானத்தில் இருந்து உடனடியாக பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழு உடனடியாக விரைந்து செயல்பட்டதால் பெரும் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்