அனுராதபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது
அனுராதபுரம் – திரப்பனை கல்குலம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரின் நண்பர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் நண்பர்கள் என்றும், போதைப்பொருள் தொடர்பாக அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுராதபுரம், திரப்பனை கல்குலம பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றதுடன் சம்பவத்தில், 28 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.