அதிகளவான மருந்துகளை வைத்திருந்த 29 வயது பெண் கைது
சிலாபத்தில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று சனிக்கிழமை 29 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் வேன் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வாகனத்தை சோதனையிட்டபோது, 64 பெட்டிகளில் அடைக்கப்பட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேக நபரால் மருந்துகள் குறித்து சரியாக விளக்கம் அளிக்கப்படவில்லை.
குறித்த பெண்ணின் பதிலில் சந்தேகம் ஏற்பட்டதன் அடிப்படையில், பொலிஸார் அவரைக் கைது செய்ததுடன் மருந்துகளையும் வேனையும் பறிமுதல் செய்தனர்.
மாதம்பேயில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்தை வைத்திருக்கவோ அல்லது கொண்டு செல்லவோ முடியாது என்பது கண்டறியப்பட்டது.
சிலாபம் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.