அதிகரிக்கும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை

நாளாந்தம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

நாளாந்தம் சுமார் 400 பேர் சிறைகளுக்கு வருவதாகவும் இதன் காரணத்தினால் தற்போதைய சூழ்நிலையில் சிறைச்சாலைகளில் நெரிசல் நிலைமை நிலவுகின்றது.

எனினும் நிலவும் நெரிசலை நிர்வகித்து கைதிகளை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், இதுவரையில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.