அட்டன்-மஸ்கெலியா சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

-மஸ்கெலியா நிருபர்-

வனராஜா பகுதியில் உள்ள அட்டன்-மஸ்கெலியா பிரதான சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணியளவில் ஒரு சைப்ரஸ் மரம் விழுந்தது.

மரம் விழுந்ததால் சாலையில் வாகன போக்குவரத்து சுமார் 40 நிமிடங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இருப்பினும், வனராஜா தோட்ட கிராம மக்களும் அட்டன் காவல்துறையினரும் விழுந்த மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, சாலை தற்போது வாகன போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சாலை ஓரமாக உள்ள ஆபத்தான பாரிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன சாரதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.