அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் காணப்பட்ட பெண்ணின் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் பார்வையிட்டு சடலத்தை மேலதிக பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது வரை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படவில்லை குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.