அடுத்த மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள்

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை  உரையாற்றிய போதே அமைச்சர் இதனை  தெரிவித்துள்ளார்.

வறுமையில் உள்ள மற்றும் அநாதரவாக கைவிடப்பட்ட மாணவர்களுக்கு குறித்த காலணி வவுச்சர்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 740,000 மாணவர்களுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்