அடிக்கடி கடைக்கு சென்று வந்த சிறுமி கர்ப்பம் : கடை உரிமையாளர் கைது!

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில்,  கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை முள்ளியவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கடைக்கு தினமும் பாடசாலை மாணவி சென்று வந்துள்ள நிலையில்,  திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மாணவி கர்ப்பமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மாணவியின் சட்ட வைத்திய விசாரணையை  தொடர்ந்து குறித்த கடை உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்