அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று திங்கட்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய அனைத்து வாக்காளர்களும் தங்களது தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களிலிருந்தும், மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலிருந்தும் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்